Latestமலேசியா

சபா பெர்ணமிலுள்ள உணவகத்தில் மான் உட்பட வனவிலங்குகள் இறைச்சி விற்பனை; அறுவர் கைது

கோலாலம்பூர், மே 19 –   உணவகத்தில் மான்கள் உட்பட வனவிலங்குகள் மற்றும்  கானாங் கோழி  இறைச்சி இருந்ததைத் தொடர்ந்து  Perhilitan எனப்படும்   வனவிலங்கு மற்றும் பூங்காத்துறை    அறுவரை கைது செய்தது. சிலாங்கூர், சபா பெர்ணமிலுள்ள  உணவகத்தில்   அவர்கள்  கைது செய்யப்பட்டதாக   தீபகற்ப மலேசிய வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையின்   தலைமை இயக்குனர் Abdul Kadir Abu Hashim தெரிவித்தார்.  அந்த உணவகத்தில்  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  4 மான் இறைச்சிகள் , கானாங் கோழி இறைச்சிகளும்  இருந்ததாக  அவர்  கூறினார்.  பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் இறைச்சிகள்    குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.  அந்த உணவகத்தில் இருந்தவர்கள்  பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வைத்திருப்பதற்கான பெர்மிட் எதுவும் கொண்டிருக்கவில்லை.

 

சட்டவிரோதமாக வேட்டையாடுவோர்  மூலம்   அந்த வனவிலங்குகளை அவர்கள்  பெற்றிருக்கக்கூடும் என  நப்பப்படுகிறது.  அந்த உணவகத்தில்  இருந்த இரண்டு  குளிர் சாதனப் பெட்டிகளில்   2,000 ரிங்கிட் மதிப்புள்ள இறைச்சிகள்  பறிமுதல் செய்யப்பட்டன.    40 முதல்   70 வயதுடைய ஆறு தனிப்பட்ட நபர்கள்     விசாரணைக்காக கைது செய்யப்பட்டு  போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக   Abdul Kadir    தெரிவித்தார். அந்த உணவகத்தில் மான் இறைச்சி உட்பட வனவிலங்கு  இறைச்சிகள்   விற்கப்படுவது    சமூக வலைத்தளங்கள்  மூலம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும்  அந்த உணவகத்தின்  வாடிக்கையாளர்களில் பல VIP -களும் அடங்குவர் என  கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!