![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-04-22-PM-941.jpg)
சிபு, ஜூன் 6 -சிபுவில் Jalan Khoo Peng Long-கில் உள்ள Sarikei படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று விரைவுப் படகுகள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தன. இந்த தீ விபத்து குறித்து அதிகாலை மணி 1.32 மணியளவில் அவசர அழைப்பை பெற்றதாக சிபு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். படகுத் துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று விரைவுப் படகுகளும் முழுமையாக தீயில் அழிந்து விட்டன .
தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் ஆற்று நீரையும் நுரையையும் பயன்படுத்தினர். இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.