![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-02-Jun-2024-03-44-PM-8911.jpg)
கோலாலம்பூர், ஜூன் 2 – Selangor ரின் சர்ச்சைக்குரிய Demand Responive Transit
விவகாரத்தில் முதல் முறையாக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான Hannah Yeoh மௌனம் கலைந்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவது சிறந்தது என்பதால் தாம் இதற்கு முன் கருத்துரைக்கவில்லையென அவர் கூறினார். மாநிலத்தில் பொது போக்குவரத்து சேவை தொடர்பில் தமது கணவரின் நிறுவனத்தை சிலாங்கூர் அரசாங்கம் நியமித்தது குறித்து விசாரரணை நடத்துவதை MACC யிடம் விட்டு விடுவதாக Hannah Yeoh கூறினார்.
மலேசியர்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதால் DRT விவகாரத்தில் MACC யின் விசாரணையை நடத்த வேண்டும் என்ற சிலாங்கூரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக அவர் தெரிவித்தார். தற்போது விசாரணை தொடங்கியிருப்பதால் உண்மை தெரியவேண்டும் என தமது முகநுலில் Hanna Yeoh தெரிவித்தார். இப்போதைய நிலையில் இந்த விவகாரம் குறித்து தாம் கருத்துரைப்பது முறையாக இருக்காது என அவர் கூறினார்.