![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/Collage-Maker-01-Nov-2023-11-05-AM-8766.jpg)
உலு திரங்கானு, நவம்பர் 1 – 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம், இன்று அதிகாலை, உலு திரங்கானு சுகாதார துறை அலுவலகத்திற்கு அருகேயுள்ள சாக்கடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் அந்த சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுவரை, உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்தவர் கொல்லப்பட்டாரா? அல்லது அது ஒரு விபத்தா? என்பது குறித்தும் போலீசார் இன்னும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.