![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-06-36-PM-2338.jpg)
குவா மூசாங், நவ 22 – கிளந்தானில் லோஜிங் – குவா முசாங் சாலையை காரில் கடந்தபோது அந்த சாலையோரத்தில் புலி ஒன்று படுத்திருந்தது குறித்து அக்காரில் இருந்த பயணி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சிலாங்கூரில் சபாக் பெர்னாமிலிருந்து குவா முசாங்கிற்கு தமது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் அந்த புலியை கண்டதாக 28 வயதுடைய முகமட் சைபுல் அனுவார் அப்துல் ஹாடி தெரிவித்தார். அதற்கு முன்னதாக மஸ்ஜிட் லோஜிங்கில் இரவு தொழுகையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டபோதுதான் அந்த புலியை பார்க்க நேரிட்டதாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை தமது தமது நண்பரிடம் இதனை தெரிவித்தாகவும் அந்த மிருகத்தை பார்க்க விரும்பவில்லையென கூறிவிட்டு அவர் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்றதாக முகமட் சைபுல் அனுவார் தெரிவித்தார். வீட்டிற்கு சென்று சேர்ந்தவுடன் காரின் டெஷ்போர்ட் கேமராவை பரிசோதித்தபோது அதில் புலியின் உருவத்தைக் கொண்ட காணொளியை இடம்பெற்றிருந்ததை கண்டதாகவும் முகமட் சைபுல் அனுவார் தெரிவித்தார்.