Latestமலேசியா

சிபுவில், தனியாக காரை செலுத்திய ‘ஆட்டிசம்’ சிறுவன் ; தந்தைக்கு எதிராக வழக்குப் பதிவு

சிபு, ஜூன் 6 – சபா, சிபு நகரில், தனியாக வாகனம் ஓட்டிய 11 வயது சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.

நேற்று மாலை மணி 6.50 வாக்கில், அச்சம்பவத்தை போலீசார் அடையாளம் கண்டதாக, சிபு போலீஸ் தலைவர் ACP ஜுல்கிப்ளி சுஹைலி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, “ஆட்டிசம்” குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சிறுவனும், அவனது பெற்றோரும் விசாரணைக்காக சிபு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையும் ஜுல்கிப்ளி உறுதிப்படுத்தினார்.

போக்குவரத்து சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அதோடு, சம்பந்தப்பட்ட சிறுவன்,சிபு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, சிறுவன் ஒருவன் தனியாக வாகனம் ஓட்டும், 30 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!