![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/sibu.png)
சிபு , ஜூன் 4 – சிபுவில் Jalan Ling Kai Cheng கில் e – hailing வாடகை கார் ஓட்டுனரான பெண் ஒருவரிடம் ஆயுத முனையில் கொள்ளையிட்டதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு ஆடவன் கைது செய்யப்பட்டான். ஆவணங்கள் எதுவும் இல்லாத 18 வயது இந்தோனேசிய ஆடவனை சிபு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைத் துறை போலீஸ் குழுவினர் நண்பகல் மணி 1.30 மணியளவில் நேற்று முன்தினம் கைது செய்ததாக சிபு மாவட்ட போலீஸ தலைவர் ACP Zulkipli Suhaili தெரிவித்தார்.
மே மாதம் 30 ஆம் தேதி அந்த சந்தேக நபரை தனது வாடகை காரில் ஏற்ற முயன்றபோது விடியற்காலை 4.30 மணியளவில் அந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த 55 வயது பெண்ணின் வாடகை காரில் ஏறியவுடன் கத்தியை காட்டிஅந்த சந்தேகப் பேர்வழி மிரட்டியதைத் தொடர்ந்து அப்பெண் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடியவுடன் அவரது கார் மற்றும் அதிலிருந்த விலை உயர்ந்து பொருட்களை அவன் கொள்ளையடித்தாக ACP Zulkipli தெரிவித்தார். அந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் சொற்ப காயத்திற்கு உள்ளானார். கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்தது சிறிது தொலைவில் விபத்துக்குள்ளான நிலையில் அக்கார் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.