Latestமலேசியா

சிறுவன் ஜெய்ன் ராயன் கொலை தொடர்பில் பிள்ளை பராமரிப்பாளருடன் மேலும் இருவர் விசாரணைக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஜூன் 3 – ஆறு வயது ஆட்டிசம் சிறுவன் ஜெய்ன் ராயன்
(Zayan Rayyan ) கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு மேலும் மூவர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஜைய்ன் குடும்பத்தினரின் பிள்ளை பராமரிப்பாளரும் ஒருவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் கமிஷனர் உசேய்ன் ஒமார் கான் ( Hussein omar Khan ) தெரிவித்திருக்கிறார்.

இதர இருவர் பிள்ளை பராமரிப்பாளரின் உறவினர்களாவர்.

இவர்கள் அனைவரும் விசாரணைக்காக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையின் செயல்முறையின் ஒரு பகுதியாக அவர்கள் அழைக்கப்பட்டனர். மேலும் பல சாட்சிகள் விசாரணைக்கு உதவ அழைக்கப்படலாம் என்று உசேய்ன் கூறினார்.

விசாரணைக்கு உதவியாக ஜெய்ன் ராயன் பெற்றோர்களின் கை தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜைய்ன் பெற்றோர்கள் ஜூன் 8ஆம்தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!