![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-07-at-6.44.08-PM.jpeg)
ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதால் குற்றவியல் சட்டத்தின் கொலை குற்றத்திற்கான 302ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோஸ்ரீ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார். அச்சிறுவனின் மரணம் ஒரு கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அச்சிறுவனின் கழுத்திலும் அவனது உடலிலும் காயங்கள் இருந்ததாக சுங்கைபூலோ மருத்துவமனையில் அவனது உடலில் மேற்கொள்ளப்பட்ட சவ பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். இந்த விவகாரத்தில் பல தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதையும் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அவர் கூறினார். செவ்வாய்க்கிழமையன்று நண்பல் 12.30 மணியளவில் காணாமல்போன ஜெய்ன் உடல் நேற்றிரவு 10 மணியளவில் டமன்சரா டமாயில் இடமான் அபார்ட்மெண்ட்டில் அவனது வீட்டிற்கு அருகேயுள்ள ஆற்றில் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.