![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-01-Jun-2024-04-02-PM-2852.jpg)
கோலாலம்பூர், ஜூன்-1 – 6 வயது சிறுவன் Zayn Rayyan Abdul Matiin-டின் மரணம் தொடர்பில் போலீசுக்கு புதியத் தடயங்கள் கிடைத்திருப்பததே, அவனது பெற்றோரின் கைதுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
அத்தம்பதியின் வழக்கறிஞர் Mahmud Jumaat அதனை உறுதிப்படுத்தினார்.
தற்போதைக்கு அது குறித்து எந்தவித யூகங்களையும் எழுப்பாமல், போலீஸ் விசாரணைக்கு வழி விடுவதே நல்லது என அவர் சொன்னார்.
இவ்வேளையில் Zayn Rayyan-னின் பெற்றோரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க போலீஸ் நீதிமன்ற ஆணையைப் பெற்றிருக்கிறது.
அவ்விருவரும் சிலாங்கூர், Puncak Alam-மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வாக்கில் கைதாகினர்.
கடந்தாண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மதியம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட Zayn, மறுநாள் அவனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆற்றோரப் பகுதியில் கழுத்தில் காயங்களுடன் இறந்துக் கிடக்கக் காணப்பட்டான்.
அவனது உடலில் காயங்கள் இருப்பது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, திடீர் மரணத்தில் இருந்து படுகொலையாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டது.