Latestஉலகம்

சிலி விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை நகர்த்திச் செல்லும் இயந்திரத்திற்குள் லாவகமாக பயணிக்கும் சிறுவன் – காணொளி வைரல்

சிலி, நவ 25 – சிலி, சந்தியாகோ அனைத்துலக விமான நிலையத்தில், பெற்றோரிடமிருந்து பிரிந்த குழுந்தை ஒன்று, பயணப் பெட்டிகளை நகர்த்திச் செல்லும் இயந்திரத்திற்குள் புகுந்ததைத் தொடர்ந்து, விமான நிலைய வேலையாட்கள் அச்சிறுவனை காப்பாற்றினர்.

இது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோர்களின் கண்காணிப்பிலிருந்து நழுவிய அக்குழந்தை, பின்னர் லாவகமாக பயணப் பெட்டிகளை ஒப்படைக்கும் முகப்பு வழியே ஏறி, பயணப் பெட்டிகளை நகர்த்திச் செல்லும் இயந்திரத்தில் அமர்ந்துவிடுகிறார். அந்த பயணப் பெட்டி நகர்த்தியின் ‘பெல்ட்’ போகும் இடமெல்லாம், அந்த குழந்தையும் பயமின்றி நகர்ந்து போக, இதனை பாதுகாப்பு காமிரா கண்டுபிடித்து, பின்னர் வேலையாட்களால் காப்பாற்றப்படுகிறார்.

இச்சம்பவம் கடந்த நவம்பர் 19ஆம் திகதி நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!