Latestமலேசியா

சுபாங் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், பாலஸ்தீனியர்களுக்கு 10,000 ரிங்கிட் நன்கொடை

சுபாங் ஜெயா, டிச 2 – காஸா – இஸ்ரேல் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக லாடாங் சுபாங்கில் உள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் பக்தர்களின் சங்கம், பாலஸ்தீன மக்களின் அறக்கட்டளைக்கு Humanitarian Trust Fund of the People of Palestine மூலம் 10,000 ரிங்கிட் நன்கொடையை வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை கடந்த 2 மாதங்களில் சுபாங் தோட்டப் பகுதியில் சுற்றியுள்ள உள்ளூர் மக்களீடமிருந்து வசூலிக்கப்ப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் திரு விஜயன் கருப்பையா கூறியுள்ளார்.

இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன நாட்டில் இன்னும் அவதிப்பட்டு வரும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மனிதர்கள் எனும் முறையில் அவர்களால் முடிந்த உதவியை வழங்கியுள்ளதாக நன்கொடையை ஒப்படைத்த பின் செய்தியாளர்களிச்டம் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!