Latestமலேசியா

செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி

கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா?

குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Cikgu Chandra-வை மிரட்டும் வகையில் பூச்சோங், தாமான் கின்றாராவில் உள்ள அவரது வீட்டில் அண்மையில் மர்ம நபர்கள் 3 கார்களைச் தீயிட்டுச் சேதப்படுத்தினர்.

அது தொடர்பான விசாரணைக்காக இதுவரை 7 பேர் கைதான நிலையில், அவர்களில் ஒருவரைப் பிடிக்க போலீஸார் அவரின் மனைவியை ‘ஆயுதமாகப்’ பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கணவர் சரணடைவதாகக் கூறியும், மனைவியைக் போலிஸ் நிலையம் வர வைத்து விலங்கிட்டு லாக்கப்பில் ஒரு நாள் இரவு வைத்ததாக கூறப்படுகிறது

தவறே செய்யாதவரை அதுவும் குடும்பப் பெண்ணை அவ்வாறு செய்தது நியாயமா என, சுபாங் ஜெயா போலீஸ் நிலையத்திற்கு முன் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு போலீஸ் பதில் சொல்லியே ஆக வேண்டுமென்றும், காலம் தாழ்த்தாமல் கைதானவர்களை விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

அந்த எழுவரில் மூவர் முதலில் கைதுச் செய்யப்பட்ட வேளை, நால்வர் பின்னர் தாங்களாகவே போலீஸிடம் சரணடைந்தனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!