Latestமலேசியா

செதாப்பாக்கில், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்த ஆடவர் மரணம்

கோலாலம்பூர், மே 28 – தலைநகர், செதாப்பாக், ஜாலான் கெந்திங் கிள்ளானிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு மணி 8.35 வாக்கில் அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக, வங்சா மாஜு போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் மாடியில், ஆடவர் ஒருவர் சுயநினைவு இல்லாத நிலையில் விழுந்து கிடப்பதாகவும், அவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அந்த 32 வயது உள்நாட்டு ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது சோதனையில் பின்னர் தெரிய வந்தது.

அவ்வாடவரின் இறப்பில் குற்றச்செயல் அம்சங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. அதனால் அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளதாகமுஹமட் லாசிம் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!