Latestஇந்தியா

சென்னையில் பெய்த கனமழையால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு

சென்னை, டிச 6 – மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து வெவ்வேறு சம்பவங்களில் 17 பேர் மாண்டனர். தற்போது வரை 16 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை நகரில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரித்திருக்கிறார்.  அதோடு சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!