Latestமலேசியா

செராசில் பராமரிப்பாளரால் 17 மாத குழந்தை தாக்கப்பட்டதாக தாய் போலீசில் புகார்

காஜாங், ஜூன் 4 – Bandar Mahkota Cheras சிலுள்ள மழலையர் பள்ளியில் விடப்பட்ட தனது 17 மாத பெண் குழந்தையை அதன் பராமரிப்பாளர் ஒருவர் தாக்கியிருப்பதாக அக்குழந்தையின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து 32 வயதுடைய Heng Lee Shuan போலீசில் புகார் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மழலையர் பள்ளியின் முன்னாள் ஊழியர் ஒருவர் மே மாதம் 28ஆம் தேதி WhatsApp ப்பில் தனக்கு பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுக் காட்சிகள் கிடைத்ததைத் தொடர்ந்து தனது குழந்தை தாக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார். பராமரிப்பாளர் தனது குழந்தையின் வாயில் கட்டாயமாக உணவு தினிப்பதையும் தனது குழந்தை அழும் காட்சியையும் அந்த வீடியோவில் கண்டதையும் Heng Lee Shuan தெரிவித்தார்.

அதோடு தனது குழந்தையின் முடியை பராமரிப்பாளர் இழுத்ததோடு தலையிலிருந்து முடி வெளியான புகைப்படத்தையும் அந்த மழலையர் பள்ளியின் முன்னாள் ஊழியர் வெளியிட்டிருப்பது தமக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். இதர குழந்தைகளும் இதுபோல் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என தனது கணவர் Kenneth Thiah Laa Wei யுடன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த Heng Lee Shuan இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரண நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!