![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-10-at-9.13.52-AM.jpeg)
இத்தாலி, டிச 10: எங்கு பார்த்தாலும் செல்பி மயம். தற்போது ஒவ்வொரு கைகளிலும் கேமராக்கள் வந்துவிட்ட நிலையில், செல்பி எடுக்கும் மோகத்தால், உயிரை இழக்கும் அளவுக்குக் கூட பல இன்னல்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளதை நாம் நாள்தோறும் இணையத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த வரிசையில், இத்தாலியின் வெனிஸ் (Venice) எனும் நகரில் கோண்டோலா (Gondola) படகில் பயணம் செய்த சீனவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் சேர்ந்துள்ளனர்.
படகில் நின்றுக் கொண்டு செல்பி எடுக்காதீர்கள் என பலமுறை எச்சரித்தும், அதில் பயணித்த சீன சுற்றுப் பயணிகள் சற்றும் கேட்காததால், ஒரு கட்டத்தில் படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதனால், அப்படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இச்சம்பவம் அண்மையில்தான் நிகழ்ந்துள்ள நிலையில், இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.