Latestமலேசியா

சையன் ரையானின் கொலை வழக்கு ; வழக்கறிஞர் இனி அவரது பெற்றோரை பிரதிநிதிக்கமாட்டார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4 – குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ், விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவன் சையன் ரையன் பெற்றோரின் வழக்கறிஞர், இன்று முதல் அவர்கள் சார்பாக வாதாடமாட்டார்.

தவிர்க்க முடியாத காரணங்களால், தாம் இனி அவர்களை பிரதிநிதிக்கப்போவதில்லை என எமிர் மாஹ்மூட் & கோ நிறுவனத்தை சேர்ந்த மாமூட் ஜுமஹாட் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, அந்த வழக்கு விசாரணை சுமூகமாக நடைபெற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக மாமூட் கூறியுள்ளார்.

அதனால், சட்ட பயிற்சியாளர் என்ற முறையில், அனைத்து தரப்பினரும் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, அந்த வழக்கு தொடர்பில் தேவையில்லாத யூகங்களையும், ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் எனவும் மாமூட் கேட்டுக் கொண்டுள்ளார்.

சையன் ரையான் கொலை தொடர்பில், கடந்த வெள்ளிக்கிழமை, காலை மணி 10.05 வாக்கில், புன்சாக் ஆலாமிலுள்ள குடும்ப வீட்டிலிருந்து கைதுச் செய்யப்பட்ட அவரது 28 வயது பெற்றோரை மாமூட் பிரதிநிதிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்தாண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட சையன் ரையான், மறுநாள் வீட்டிற்கு அருகில் 200 மீட்டர் தொலைவிலுள்ள, சிற்றோடை ஓரத்தில் இறந்து கிடக்க கண்டிபிடிக்கப்பட்டார்.

அவரது கழுத்திலும், உடலிலும் காயங்கள் இருந்தது சவப்பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!