Latestமலேசியா

சொந்த மகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை தலைமறைவாக இருந்த ஆடவன் கைது

மலாக்கா, பிப் 7 – 14 வயது சொந்த மகளை பாலியல்  வன்கொடுமைக்கு உள்ளாக்கி    தலைமறைவாக இருந்து வந்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டான்.  விசாரணைக்கு  உதவும்பொருட்டு அந்த நபரை  7 நாட்களுக்கு  தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட்சார்டா ஷீன்ஹா முகமட் சுலைமான் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அச்சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில்  கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து மலாக்கா மருத்துவமனையின் மருத்துவர் இது குறித்து போலீசில்  புகார் செய்துள்ளார். 

பாதிக்கப்பட் அந்த சிறுமி  இம்மாதம் 5ஆம் தேதி குழந்தையை பெற்றெடுத்துள்ளார்  என    மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ  வீரா ஸைனோல் சமாஹ் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார்.   ஏற்கனவே  ஆறு குற்றச்சாட்டுக்களை கொண்ட அந்த ஆடவன்  நேற்று  நள்ளிரவு  12 மணியளவில்  மலாக்கா,கம்போங் கெளமக் டாலாமில் சாலையோரத்தில் கைது செய்யப்பட்டான் . .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!