![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-06-Dec-2023-11-04-AM-3461.jpg)
தோக்யோ, டிசம்பர் 6 – ஜப்பான், தோக்யோவில், புறா கூட்டத்தை மோதி அதில் ஒரு புறாவுக்கு மரணம் விளைவித்த டாக்சி ஓட்டுனர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு எதிராக, அந்நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புறா கூட்டத்தை மோதித் தள்ளியதோடு, அதில் ஒரு புறா உயிரிழக்க காரணமாக இருந்ததாக, அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அச்சம்பவம், உள்நாட்டு நேரப்படி, நவம்பர் 13-ஆம் தேதி, பிற்பகல் மணி ஒன்று வாக்கில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சாலை சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்திற்கு மாறியதும், அவ்வாடவர் தனது வாடகை காரை வேகமாக செலுத்தி புறாக் கூட்டத்தை மோதியதாக போலீசார் கூறியுள்ளனர்.
சம்பவத்திற்கு பின் தப்பி ஓடி விட்ட அவர், கைது செய்யப்பட்டதும், “சாலைகள் மனிதர்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்டது. புறாக்கள் தான் தங்களை சொந்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்” என கூறி தனது செயலை தற்காத்து பேசியுள்ளார்.