கோலாலம்பூர், மார்ச் 13 – இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் “ ஜப்பார் சாடிக்”கின் முதலாளி என தன்னை தொடர்புபடுத்தி, அவதூறு பரப்பி, தம்மீது வேண்டுமென்றே கலங்கம் ஏற்படுத்தி வருவதாக சில இந்திய மற்றும் மலேசிய ஊடகங்களை கடுமையாக சாடியிருப்பதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார் மலேசியாவின் டத்தோ மாலிக்.
மாலிக் ஸ்டிரிமின் தலைமை நிர்வாகியான டத்தோ மாலிக், மலேசியாவின் டோன் என்றும் போதைப் பொருள் மாவியா என்றும் தன்னை ஒரு ஊடகம் சித்தரித்திருப்பதாக கண்டுத்திருக்கிறார்.
இவ்விவகாரம் குறித்து, தற்போது டத்தோ மாலிக் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
இவ்விவகாரம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலிஸ் படைத்தலைவர் ரசருடின் கூறியிருக்கின்றார் எனபது குறிப்பிடத்தக்கது.