![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-19-Mar-2024-05-14-PM-6622-1.jpg)
ஜெம்போல், மார்ச் 19 – போலீஸ் அதிகாரியை போல பவனை செய்து ஏமாற்று வேலையில் ஈடுபட்ட, கார் உபரி பாகங்கள் விற்பனையாளர் ஒருவருக்கு, நெகிரி செம்பிலான்,பஹாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்காயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
45 வயது சேய் சூன் சியோங் எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவன் மூன்று மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.
இம்மாதம் 12-ஆம் தேதி, இரவு மணி பத்து வாக்கில், போலீஸ் அதிககாரியை போல பாவனை செய்து, நபர் ஒருவரின் அடையாள அட்டையை அவன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.