Latestமலேசியா

ஜொகூரில் GRO சேவை வழங்கி வந்த 3 கேளிக்கை விடுதிகளில் அதிரடிச் சோதனை; 129 பேர் கைது

ஜொகூர் பாரு, ஜூன் 1 – ஜொகூரில் மூவார் மற்றும் இஸ்கண்டார் புத்ரியின் தாமான் நூசா பெஸ்தாரியில் GRO எனப்படும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் சேவையை வழங்கி வந்த 3 இரவு கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 129 பேர் கைதாகினர்.

அவர்களில் வெளிநாட்டவர்களான 115 பெண்களும், 15 ஆண்களும் அடங்குவர்.

எஞ்சியவர்கள் 2 உள்ளூர் ஆடவர்கள், ஒரு உள்ளூர் பெண்மணி என ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம். குமார் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் 18 முதல் 47 வயதுக்குக் இடைப்பட்டவர்கள் ஆவர்.

வெள்ளிக்கிழமை மதியம் மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடிச் சோதானையில் பல்வேறு இசைக் கருவிகள், 4,210 ரிங்கிட் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்மூன்று கேளிக்கை விடுதிகளில் இரண்டு முறையான பெர்மிட்டைக் கொண்டிருக்கவில்லை.

மற்றொன்று, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டு வந்துள்ளது.

தொடக்கக் கட்ட சிறுநீர் பரிசோதனையில் 7 வெளிநாட்டுப் பெண்கள் உள்ளிட்ட 10 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!