Latest

ஜோகூரில் சூதாட்ட நிலையத்திற்கு இடமில்லை என்பதை சுல்தான் இப்ராஹிம் ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார் – மந்திரிபுசார் தகவல்

கோலாலம்பூர், ஏப் 26 – ஜோகூரில் சூதட்ட நிலையத்திற்கு இடமில்லை என்பதை ஜோகூர் சுல்தான் Sultan Ismail ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார் என அம்மாநில மந்திரிபெசார் Onn Hafiz Ghazi தெரிவித்திருக்கிறார். சூதாட்ட நிலையம் ஜோகூரில் செயல்படுவதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லையென தற்போதைய பேரரசருமான Sultan Ibrahim கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே ஜோகூரிலுள்ள Forest City யில் சூதாட்ட விடுதி ஒன்றை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக Bloomberg வெளியிட்ட அறிக்கை முட்டாள்தனமானது என Onn Hafiz Gazi கூறினார்.

சூதாட்ட விடுதிக்கு அனுமதியில்லை என்ற நிலையில் ஜோகூர் தெளிவாக இருப்பதை இது காட்டுவதாக அவர் கூறினார். கூட்டரசு அரசாங்கத்திற்கு ஜோகூர் மாநில அரசாங்கம் ஆதரவாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்துள்ளனர். ஜோகூர் மக்களுக்கு உயர் தொழில் திறன் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் ஜோகூரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்து மாநில அரசாங்கமும் பாடுபட்டு வருகிறது. Forest City மற்றும் ஒட்டுமொத்தமாக ஜோகூருக்கு தீய நோக்கத்தோடு கீழறுப்பு அம்சங்களை கொண்டு இந்த வதந்தி பரப்பப்பட்டிருப்பதாக Onn Hafiz Gazi கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!