![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-01-at-3.54.18-PM-1.jpeg)
ஜொகூர் பாரு, ஜூன்-1 – ஜொகூர் பாருவில் Toyota
Vellfire கார் தடம் புரண்டு 2 மீட்டர் ஆழமுள்ள பெரியக் கால்வாயில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
அவ்விபத்து இன்று காலை 7 மணி வாக்கில் Tune Hotel முன்புறம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, காரினுள் சிக்கிக் கொண்டிருந்த 2 பெண்களையும் ஓர் ஆணையும் வெளியே கொண்டு வந்தது.
ஆனால் மூவருமே இறந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
அவர்கள் முறையே 28 வயது Chu Wei Yean, 35 வயது Aw Siew Chern, 31 வயது Chu Wan Rou என அடையாளம் காணப்பட்டது.
மேல் விசாரணைக்காக சடலங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.