Latestமலேசியா

ஜோகூரில், தீவிரவாதம் அல்லது தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் நடவடிக்கைகள் ; போலீஸ் தீவிரமாக கண்காணிக்கிறது

ஜோகூர் பாரு, மே 27 – ஜோகூரில், மத தீவிரவாத நடவடிக்கைகள் அல்லது சந்தேகத்திற்குரிய அமைப்புகளை, மாநில போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

எனினும், அதுபோன்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுபவர்களை சாதாரணமாக அல்லது எளிதாக அடையாளம் காண முடியாது என ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஸ்னர் எஸ்.குமார் கூறியுள்ளார்.

அதனால், அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண, அண்டை வீட்டுக்காரர்கள் உட்பட சுற்றியுள்ள மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக குமார் சொன்னார்.

குறிப்பாக, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது செயல்கள் குறித்து புகார் செய்ய அவர்கள் முன்வர வேண்டுமென குமார் கேட்டுக் கொண்டார்.

ஒருவரை பார்ப்பதால் மட்டும், அவரது சித்தாந்தத்தை நம்மால் அடையாளம் காண முடியாது.

எனவே, நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தார் வழங்கும் தகவல்கள், அசாம்பாவிதங்கள் அல்லது குற்றச்செயல்களை ஆரம்பத்திலேயே தடுக்க பெரிதும் உதவும்.

ஜோகூர் போலீஸ் படையின் மாதந்திர கூட்டத்தில் உரையேற்றிய போது குமார் அவ்வாறு சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!