![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/2623786-700x470.jpg)
ஜோகூர் பாரு, ஏப் 2 – ஜோகூரில் சுங்கத்துறையின் தனிமைப்படுத்தும் மற்றும் கண்காணிப்பு சேவைகள் துறையிலுள்ள அதிகாரிகள் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவப்பட்ட 16 டன் சாடின்களை பறிமுதல் செய்தனர். மார்ச் 27ஆம் தேதியன்று லோரியின் மூலமாக சுல்தான் Iskandar கட்டிடத்திலுள்ள ஜோகூர் பால நுழைவுப் பகுதியில் கிட்டத்தட்ட 84,000 ரிங்கிட் மதிப்புள்ள அந்த சாடின்கள் கொண்டுவரப்பட்டதாக ஜோகூர் சுங்கத்துறையின் இயக்குநர் Edie Putra Md Yusof தெரிவித்தார். அந்த சாடின்களை ஏற்றி வந்த லோரி அதற்கான இறக்குமதி பெர்மிட்டுகளை கொண்டிருக்கவில்லையென்பதோடு 1,600 பெட்டிகளில் அந்த சாடின்கள் அடைக்கப்பட்டிருந்ததன. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதோடு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் 30 வயதுடைய லோரி ஓட்டுனர் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக Edie Putra கூறினார்.