![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-30-at-09.05.20_369569b5.jpg)
கோலாலம்பூர், மார்ச் 30 – ஜோகூர் பாரு Taman Mount Austin னில் பொழுதுபோக்கு விடுதி ஒன்றில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என நம்பப்படும் சந்தேகத்திற்குரிய 54 விலைமாதர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 மற்றும் 49 வயதுக்குட்பட்ட 63பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர்பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார். அவர்களில் வியட்னாமைச் சேர்ந்த 48 பெண்களும் இரண்டு ஆடவர்களும் அடங்குவர்.
மேலும் தாய்லாந்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், இந்தோனேசியாவைச் சேர்நந்த ஒரு பெண் மற்றும் ஆடவருடன், சீனாவைச் சேர்ந்த இரண்டு பிரஜைகள் மற்றும் நேப்பாளத்தைச் சேர்ந்த மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் சந்தேகத்திற்குரிய விலைமாதர்களாக இருக்கக்கூடும் என்றும் எஞ்சியோர் அந்த பொழுதுபோக்கு மையத்தில் வேலை செய்து வந்தவர்கள் என பஹாருதீன் தாஹிர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த சந்தேகப் பேர்வழிகளில் பலர் தங்களது சோசியல் பாஸ் மற்றும் வேலை அனுமதியை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
இன்னும் சிலர் முறையான பயண ஆவணங்களை கொண்டிருக்காவர்கள் என்றும் அவர் சுட்டிக்காடினார். மேலும் அந்த பொழுதுபோக்கு விடுதியின் பராமரிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக இருந்து வருந்த உள்நாட்டைச் சேர்ந்த ஆடவரும் இரண்டு உள்நாட்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான வெளிநாட்டு பெண்கள் Setia Tropika விலுள்ள குடிநுழைவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.