![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/gate.png)
ஜோகூர் பாரு, ஜூன் 4 – ஜோகூர் பாருவில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற Toyota Vios கார் கவிழ்ந்த பின்னர் இஸ்தானா பெசார் அரண்மனையின் வேலியில் மோதியது. நேற்று மாலை மணி 3 அளவில் நடந்த அந்த சம்பவத்தில் சாலை வழுக்கியதால் 25 வயதுடைய நபர் தனியொருவராக ஓட்டிச் சென்ற கார் இந்த விபத்திற்கு உள்ளானதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவுப் செலமாட் (Raub Selamat) தெரிவித்தார். இந்த விபத்தில் இதர வாகனங்கள் எதுவும் சம்பந்தப்படவில்லை. அந்த காரை ஓட்டிய நபர் மது போதையில் இல்லை என்பதோடு அவர் போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை என சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதாகவும் ரவுப் செலமாட் கூறினார்.
அந்த கார் ஓட்டுனர் காயத்திற்கு உள்ளாகவில்லை என்பதோடு அவர் போலீஸ் ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் 43 ஆவது விதியின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானதோடு அரண்மனையின் வேலி சேதம் அடைந்திருப்பதையும் அதில் காணமுடிந்தது.