![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/police_logo_1712034351-780x470.webp)
ஜோகூர் பாரு, ஏப்ரல் 2 – ஜோகூர் பாரு, ஜாலான் செராம்பாங்கிலுள்ள, வரிசை கடைகளுக்கு பின்னால், 67 வயதான வீடற்ற பெண் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.
எனினும், அச்சம்பவத்தில் குற்றவியல் அம்சம் எதுவும் இல்லை என்பதை, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரவுப் செலாமாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
போராட்டம் அல்லது கொலை நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் 67 வயது டான் சியூ லியாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர், அப்பகுதியில் சுற்றி திரிந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்பெண்ணி உடல் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளை ; அவரது உறவினர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.