Latestமலேசியா

ஜோகூர் பாருவில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 38 பாலர் பள்ளி மாணவர்களும் 6 ஆசிரியர்களும் மீட்கப்பட்டனர்

ஜோகூர் பாரு, டிச 7 – ஜோகூர் பாருவில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கம்போங் முகமது அமினில் மழலையர் பள்ளியில் சிக்கிக் கொண்ட 38 மாணவர்கள் மற்றும் ஆறு ஆசிரியர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்.

நேற்று மதியம் முதல் சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் உடனடியாக வெளியேற்ற முடியாமல் அந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தவித்துக் கொண்டிருந்தனர்.

மாலை மணி 3.30 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் இரு இயந்திர படகுகளின் துணையோடு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டனர்.

மாற்று திறனாளி உட்பட இரண்டு மூத்த குடிமக்களும் மீட்கப்பட்டதாக Larkin தீயணைப்பு நிலையத்தின் தலைவர் சுஹைமி அப்துல் ஜமால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!