![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-01-12-PM-4529.jpg)
ஜோகூர் பாரு, ஜூன் 6 – ஸ்கூடாய்க்கு அருகே Tamam Tan Sri Yaakob பில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அதிரடி சோதன நடத்திய மெரின் போலீஸ் குழுவினர் 383 பெட்டிகளில் இருந்த போலி மதுவை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை மணி 4.45 அளவில் அந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் ( M.Kumar ) தெரிவித்தார். அந்த தொழிற்சாலையில் போலியான மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு அவை கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததன.
இந்த நடவடிக்கையின்போது 33 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் எந்தவொரு அடையாள ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை. அந்த தொழிற்சாலையிலிருந்து மதுபானங்கள் மட்டுமின்றி , குழாயுடன் கூடிய இரண்டு மின்னியல் நீர் பம்புகள், திரவமய வர்ணக் கலவை , ஐந்து சுருள்களைக் கொண்ட சுங்க முத்திரை , இரண்டு பிளாஸ்டிக் பீப்பாய்களில் இருந்த மதுவும் ,போத்தல் மூடிகளும் மற்றும் கை தொலைபேசியும் காணப்பட்டதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.