Latestமலேசியா

டத்தோ கெராமாட் LRT தளத்தில் விழுந்த ஆடவன் ரயில் மோதி மரணம்

கோலாலம்பூர், டிச 2 – நேற்று இரவு, டத்தோ கெராமாட் LRT தளத்தில் விழுந்த ஆடவன் ரயில் மோதி மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுந்ததில், 27 வயதான அவ்வாடவனின் இரு கால்களும் ரயிலினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவ்வாடவன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்ததாக மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு மணி 8.50 அளவில் அச்சம்பவம் நிகழ்ந்த வேளை, 9.05 மணிக்கு மீட்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு விரைந்த மீட்புப் படையினர் சிறிது நேரத்தில் அவ்வாடவனின் உடலை மீட்டெடுத்தனர்.
இச்சம்பவத்தினால், அந்த ஓடு தளத்தில் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு, பயணிகளுக்கு இதர பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக Rapid Rail நிறுவனம் அறிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!