Latestமலேசியா

டாக்டர் மகாதீர் சுயநினைவுடன் இருக்கிறார் – உதவியாளர் விளக்கம்

கோலாலம்பூர். பிப் 20 – முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் சுயநினைவுடன் இருப்பதோடு அவர் கவலைக்கிடமாக இல்லையென அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார். மகாதீர் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அந்த உதவியாளர் மறுத்தார். டாக்டர் மகாதீர் இன்னமும் IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் இருந்துவருகிறார். எந்தவொரு குறிப்பிடக்கதக்க மேம்பாடு தொடர்பான விவரங்களை நாங்கள் அறிவிப்போம் என அந்த உதவியாளர் தெரிவித்தார்.

ஜனவரி 26ஆம் தேதி IJN னில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு தொற்று ஏற்பட்டதால் அங்கு டாக்டர் மகாதீர் ஓய்வில் இருந்துவருவதாக பிப்ரவரி 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. துணைப் பிரதமர் Ahmad Zahid Hamidi க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையின்போது மகாதீர் IJN னில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி அவது வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaimi இதற்கு முன் நீதிமன்றத்தில் தெரிவித்தபோது அவரது உடல் நலம் குறித்த தகவல்கள் வெளியாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!