கோலாலம்பூர், டிச 10 – வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி, சனிப்பெயர்ச்சி நடைப்பெறுகிறது.
இதனைப் பின்பற்றி ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி பூஜைகளும் யாகங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கடந்த ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி என குறிப்பிட்டிருந்தாலும் பெரும்பாலான ஆலயங்கள் வாக்கிய பஞ்சாங்கத்தைத் தான் பயன்படுத்தப்படுகின்றன.
அதோடு, பண்டைய காலம் தொட்டு வாக்கிய பஞ்சாங்கத்தினைப் பயன்படுத்திதான் பண்டிகைகளும் சிறப்பு நாட்களும் கணிக்கப்பட்டன.
எனவே, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி என்பது 20ஆம் திகதி நடைபெறுகிறது என்பதால் அதனைப் பின்பற்றி பிரார்த்தனை மேற்கொண்டு நன்மை பெற்றுக் கொள்ளுமாறு இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.