![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-03-Mar-2024-12-01-PM-5797.jpg)
ஈப்போ, மார்ச் 3 – ஈப்போவிற்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 292.1 ஆவது கிலோமீட்டரில் மாவு மூட்டைகளை ஏற்றிச்சென்ற டிரெய்லர் லோரி ஒன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதனை ஓட்டிச் சென்ற 40 வயதுடைய லோரி ஓட்டுனர் காயம் அடைந்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த சிம்பாங் பூலாய் மற்றும் கோப்பேங் தீயணைப்பு மீட்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நெஞ்சு மற்றும் காலில் காயம் அடைந்த நிலையில் லோரியில் சிக்கிக்கொண்ட அந்த ஓட்டுனரை மீட்டனர்.
சிறப்பு கருவிகளை பயன்படுத்தி மீட்கப்பட்ட அந்த ஆடவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பேரா தீயணைப்பு மீட்புப் பிரிவின் அதிகாரி Faiezaruddin Mohd Yusop வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். விபத்தின்போது சாலையில் மாவுகள் கொட்டியதைத் தொர்ந்து சாலையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.