Latestமலேசியா

தஞ்சோங் ரம்புத்தான் ஸ்ரீ சுப்பிரமணியர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை திரளாள பக்தர்கள் பங்கேற்பு

ஈப்போ, மார்ச் 10 – பேரா, தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு முருகன் மற்றும் சிவன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மகா சிவபெருமானுக்கு சிவராத்திரி விழா சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு தொடங்கி காலை மணி 3 வரை சிவபெருமானுக்கு கும்ப பூஜை, மகா அபிஷேகம் 1008 நாமாவளி அர்ச்சனைகள் சிறப்புடன் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சங்கீத பரத கலாஞ்சலி பரத நாட்டிய பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் பரத நாட்டிய படைப்புகளும் , பக்தி பாடல்கள் இசை படைப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் சிவராத்திரி பூஜை சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆலயத்தில் அருள் மிகு முருபெருமானும் மூலஸ்தானத்தில் வீற்றிருப்பதால் ஆண்டு தோறும் தைப்பூச விழாவும் மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது என்று ஆலயத் தலைவர் எஸ். ராஜேந்திரன் கூறினார். இவ்வாலத்தின் திருப்பணி இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சுமார் 2 லட்சம் ரிங்கிட் செலவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு பொது மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கும்படி ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!