Latestமலேசியா

தனியார் ஓய்வூதியத் திட்டம் ; அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசிக்கவில்லை

கோலாலம்பூர், மார்ச் 12 – தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை தற்போதைக்கு அறிமுகப்படுத்த, மனிதவள அமைச்சு உத்தேசிக்கவில்லை.

தற்சமயம் உள்ள EPF – ஊழியர் சேம நிதியே, நாட்டிலுள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய ஓய்வூதிய நிதியாகும். எதிர்காலத்தில் அவர்கள் வசதியாக ஓய்வு பெற அது உதவியாக இருக்குமென மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கியோங் தெரிவித்தார்.

அதே சமயம், விபத்துகள் அல்லது காயங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், வேலை இழப்பு, வேலை தேடுபவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட சமூக பாதுகாப்பை ஏற்படுத்தி தரும் அமைப்பாக SOCSO எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பு உள்ளது என மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!