Latestமலேசியா

தம்பதியருக்கு எதிராக மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு

சிரம்பான், ஏப் 29 – வேலைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக   இரண்டு வெளிநாட்டு பெண்களை  கடத்தியதாக  ஒரு தம்பதியர் மீது  சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.  நீதிபதி Surita Budin  முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 33 வயதுடைய  S. Kumaraguru மற்றும் அவரது மனைவி T. Agatishwari ஆகியோர் குற்றச்சாட்டை மறுத்தனர்.  41வயதுடைய  Myanmar பிரஜை  மற்றும்  21 வயதுடைய  இந்திய பிரஜையுடன் அவர்கள் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

 கடந்த ஆண்டு ஜூலை மற்றும்  அக்டோபர் மாதத்திற்கிடையே Port Dickson    Taman Bayu Indera Lukutடிலுள்ள  ஒரு வீட்டில் அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்டனர்.    2007ஆம் ஆண்டின்  புலம்பெயர்ந்தோர்   சட்டத்தின்   34 ஆவது பிரிவு மற்றும்  மனித கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் 12 ஆவது விதியின் கீழ்  அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது.  குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்கும்   தலா 12,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!