![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-29-at-8.17.20-PM.jpeg)
சிரம்பான், ஏப் 29 – வேலைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக இரண்டு வெளிநாட்டு பெண்களை கடத்தியதாக ஒரு தம்பதியர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி Surita Budin முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 33 வயதுடைய S. Kumaraguru மற்றும் அவரது மனைவி T. Agatishwari ஆகியோர் குற்றச்சாட்டை மறுத்தனர். 41வயதுடைய Myanmar பிரஜை மற்றும் 21 வயதுடைய இந்திய பிரஜையுடன் அவர்கள் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதத்திற்கிடையே Port Dickson Taman Bayu Indera Lukutடிலுள்ள ஒரு வீட்டில் அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். 2007ஆம் ஆண்டின் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் 34 ஆவது பிரிவு மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் 12 ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்கும் தலா 12,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.