![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-15-Mar-2024-08-37-PM-5699.jpg)
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 – தனது வீட்டிற்கு வெளியே, அசான் தொழுகையை கேட்கச் சென்ற ஆடவர் ஒருவர், இறுதியில் பள்ளி வேனில் சிக்கிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை காப்பாற்றியுள்ளார்.
ஜொகூர், தம்போயிலுள்ள, குடியிருப்பு பகுதி ஒன்றில், நேற்றிரவு மணி 7.15 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதனை, 33 வயது அஹ்மாட் சாபியி எனும் அந்நபர் தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளதை அடுத்து வைரலாகியுள்ளது.
பள்ளி வேனில் சிக்கிக் கொண்டிருந்த மாணவியை, ஜன்னல் வழியாக காப்பற்றிய சாபியி, அழுது மிகுந்த களைப்புடன் காணப்பட்ட அம்மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்து நோன்புத் துறக்க உணவளித்துள்ளார்.
அதன் பின்னர், அம்மாணவியில் புத்தகப்பையில் காணப்பட்ட அவரது தயாரை தொடர்புக் கொண்டு தகவல் கொடுத்துள்ளார்.
மகளை காணாமல் பதற்றத்தில் இருந்த அந்த தாய், சாபியின் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அதே சமயம், தனது மகள் பள்ளி வேனில் ஏறவில்லை என அதன் உரிமையாளர் கூறியதாகவும், அந்த தாய் சாபியிடம் கூறியுள்ளார்.
அதனால், பள்ளி பேருந்து அல்லது வேன் சேவை நடத்துனர், பிள்ளைகளின் இருப்பு குறித்து கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியன் எனவும் சாபியி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.