Latestமலேசியா

தலைநகரில், ஆயுதம் வைத்திருந்தது தொடர்பில் கைதான இஸ்ரேலிய ஆடவன் ; குற்றத்தை மறுத்து விசாரணை கோரினான்

கோலாலம்பூர், மே 21 – தலைநகரிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றிலிருந்து, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவனான அவிதன் சலோமுக்கு எதிரான வழக்கு விசாரணை, செப்டம்பர் 30-ஆம் தேதியிலிருந்து ஒன்பது நாட்களுக்கு நடைபெறுமென, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஆறு சுடும் ஆயுதங்களை யும், 200 தோட்டாக்களையும் விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்ததாக அவன் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளான்.

எனினும், அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அவன் விசாரணை கோரியுள்ளான்.

அவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 30, அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி மூன்றாம் தேதி வரை பின்னர் அக்டோபர் ஏழாம் தேதி தொடங்கி பத்தாம் தேதி வரையில், ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என நீதிபதி இன்று அறிவித்தார்.

முன்னதாக, அவிதன் 158 தோட்டாக்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வேளை ; அந்த குற்றச்சாட்டு பின்னர் 200 தோட்டாக்களாக திருத்தம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!