Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து பேசுவதை நிறுத்துவீர்; அம்னோ இளைஞர் தலைவருக்கு – செனட்டர் நெல்சன் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 11 – தாய்மொழிப் பள்ளிகளால்தான் நாட்டில் ஒற்றுமை இல்லையென்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே மலாய் மொழி ஆற்றல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் அக்மல் சலே கூறியிருப்பதை ம.இ.கா கல்விக் குழுவின் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கடுமையாக சாடியுள்ளார்.

“தமிழ் மற்றும் சீனப்பள்ளிளை மூடிவிட்டு நாட்டில் ஒரே பள்ளி முறையை அமல்படுத்த வேண்டும் என அக்மால் கூறுவதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் ஒற்றுமைக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது”என்பதை தாம் இக்மாலிடம் கேட்க விரும்புவதாக நெல்சன் தெரிவித்தார்.

அரசியல் பேச வேண்டும் என்றால் எங்களாலும் அரசியல் பேச முடியும். உங்களைப் போன்றவர்கள் கண்மூடித்தனமாக பேசுவதால்தான் நாட்டின் ஒற்றுமையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றுமை பாதிப்புக்கு, தமிழ்ப்பள்ளிகள் காரணம் இல்லை.

தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால்தான் நமது கலாச்சாரம் மற்றும் சமயத்தையும் நமது மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது. இதனால், இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும்போது நல்ல ஆற்றலுடன்தான் அவர்கள் செல்கின்றனர். எவ்வாறாயினும், இன்றும் பல தமிழ் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதை நெல்சன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தில் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நீடிப்பதற்கு நீதிமன்றமே தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டது. அப்படியிருக்கும்போது ஏன் இன்னும் தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறீர்கள் என நெல்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!