![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-24-May-2024-07-53-PM-5284.jpg)
கோலாலம்பூர், மே 24 – தாய்மொழிப் பள்ளிகளின் நிலையை தற்காத்ததற்காக கல்வி அமைச்சர் Fadhlina Sidek கை கல்வித்துறை துணையமைச்சர் Wong Kah Woh பாரட்டினார். Fadhlina வின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மற்றும் சீன போன்ற தாய்மொழிப் பள்ளிகளின் தேவையை அமைச்சு புறக்கணிக்கவில்லையென Wong Kah Woh தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் , நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தாய்மொழிப் பள்ளிகளுக்கு ஆதரவு வழங்குவதிம் அஞ்சாத ஒரு கல்வி அமைச்சர் தற்போது மலேசியாவில் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் ஒற்றுமை அரசாங்கம் மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகளின் நிலையை எப்போதும் பாதுகாக்கும் மற்றும் தற்காத்துவரும என்று கூறுவதில் Fadhlina அச்சப்படாதவர். இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லையென Wong Kah Woh தெரிவித்தார். தாய்மொழிப் பள்ளிகளை மறுபரிசீலிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லையென்பதோடு தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளை போதான மொழியாக பயன்படுத்தும் 1996ஆம் ஆண்டின் கல்விச் சட்டத்தை அமைச்சு தொடர்ந்து நிலைநிறுத்தும் என கடந்த மார்ச் மாதம் Fadhlina கூறியிருந்தார்.