![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-04-08-PM-5909.jpg)
செராஸ், நவ 22 – நண்பர்களுடன் காலை உணவை உட்கொள்ள வந்த பெண்ணுக்கு திடிரென மயக்கம் ஏற்பட்டதால், தவறுதலாக தேநீர் கடையை தனது காரால் மோதியதில் இருவர் காயமடைந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் செராஸ் ஜெயாவில் இச்சம்பவம் நிகந்துள்ளது. காரை நிறுத்த முற்பட்டபோது திடிரென மயக்கம் ஏற்பட்டதில் இவ்விபத்து ஏற்பட்டதோடு இருவர் காயமடைந்ததோடும், சிக்கன் ரைஸ் உணவகமும் சேதமுற்றது.
காயமடைந்தவர்களும் பெண் காரோட்டியும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், சேதமுற்ற அந்த தேநீர் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.