![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-23-Nov-2023-07-38-PM-2784.jpg)
லக்னோ, நவ 23 – திருமணம் செய்துக் கொள்வதாக சொன்ன சொல்லை காப்பாற்றாமல் தன்னை ஏமாற்றிய காதலனிடம் நியாயம் கேட்டு பெண் ஒருவர் கைப்பேசி இணைப்பு கோபுரத்தில் ஏறிய சம்பவம் இந்தியா லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்றும் வைரலாகி வருகிறது.
அப்பெண் இணைப்பு கோபுரத்தில் ஏறியதைத் தொடர்ந்து அங்கு கூட்டம் கூடியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸ் மற்றும் மீட்புத் துறை லாவகமாக பேசி அப்பெண்ணை காப்பாற்றி கீழே இறக்கினர்.
இதனிடையே, அப்பெண்ணி காதலன் தலைமறைவாகியுள்ள நிலையில், போலிசார் அந்த ஆடவனின் தந்தையை கைது செய்துள்ளனர். அதே சமயத்தில் அந்த காதலனையும் தேடி வருகின்றனர்.