![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-14-Mar-2024-10-41-AM-6576.jpg)
கோலாலம்பூர், மார்ச் 14- தீபகற்ப மலேசியாவில் வட பகுதியிலுள்ள எட்டு இடங்களில் கடுமையான வறட்சி மற்றும் அளவுக்கு அதிக வெப்பமான வானிலை நிலவுவதாக ‘Met Malaysia’ எனப்படும் மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கெடாவில் பாடங் திராப், கோத்த சிதார், போக்கே சேனா, பிண்டாங், சிக் மற்றும் பாலிங்கிலும், பேராவில் உலு பேராக் மற்றும் பெர்லிஸ் மாநிலத்திலும் கடும் வெப்பமான சீதோஷ்னம் இருப்பதாக நேற்று வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
35 டிகிரி செல்சியஸைத் தாண்டி 37 டிகிரி செல்சியஸை எட்டும் வெப்பமான வானிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆகக்கடைசியான துல்லியமான தகவலைப் பெற, www.met.gov.my மற்றும் சமூக ஊடக தளங்களில் அல்லது ‘myCuaca’ செயலியையும் பதிவிறக்கம் செய்யலாம் என ‘MetMalaysia’ பொதுமக்களுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறது.