Latestமலேசியா

தீ விபத்தில் 5 வீடுகள் சேதம்; மின்சாரம் தாக்குதலுக்கு பெண் உள்ளானார்

கோத்தா  பாரு,  Kampung Lundangகில் இன்று அதிகாலை  ஏற்பட்ட தீ விபத்தில்  5 வீடுகள் சேதம் அடைந்ததோடு பெண் ஒருவர்  மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். 36 வயதுடைய அந்த பெண்  தீயணைப்பு நிலையத்தின்  அவசர சேவை உதவிப்  பிரிவு வாகனத்தின் உதவியோடு  உடனடியாக   Raja Perempuan Zainab  மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.  

அதிகாலை மணி  3.15 அளவில்   அந்த தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன்   5 நிமிடத்திற்குள்  சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றடைந்ததாக  தீயணைப்பு  மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை  அதிகாரி   Ramli Abdullah  தெரிவித்தார்.   

Kota Darul Naim,   Kata Baharu,  Tunjong, Pengkalan Chepa ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த  31 தீயணைப்பு வீரர்களும் அதிகாரிகளும்  சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருகை புரிந்து  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.   இச்சம்பவத்தில் மூன்று வீடுகள்  100   விழுக்காடு அழிந்தன.  இதர இரண்டு வீடுகள் 70 விழுக்காடு சேதம் அடைந்ததோடு    இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் அழிந்தன என இன்று Ramli    வெளியிட்ட அறிக்கையில்  விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!