Latestமலேசியா

தேசிய வகை மெளண்ட் ஆஸ்தின் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்டம்

ஜோகூர் பாரு, மே 29 – கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத் திலகங்களுக்கு, நன்றிக் கடன் செலுத்தும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய வகை ஆஸ்தின் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அப்பள்ளியின் மேலாளர் வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அக்கொண்டாட்டத்தில், ஆசிரியர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.

வகுப்பறையில் நின்று பணிபுரியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில், இவ்விழாவில் பாரம்பரியமாகச் சிறப்புச் செய்யப்பட்டதாக முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் பள்ளி மேலாளர் வாரியத்தின் உறுப்பினருமான James Selvanathan தெரிவித்தார்.

505 மாணவர்களுடன் 36 ஆசிரியர்கள் கொண்டு இப்பள்ளி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!