Latestமலேசியா

தைப்பிங்கில், TNB அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய இந்திய வணிகருக்கு ; 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஈப்போ, மார்ச் 20 – சட்டவிரோத மின்சார இணைப்பு தொடர்பான குற்றத்தை மறைக்க, TNB – மின்சார வாரிய அதிகாரிக்கு ஆறாயிரத்து 500 ரிங்கிட் கையூட்டு வழங்கிய இந்திய ஆடவர் ஒருவருக்கு, ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

39 வது ஆர்.கே. சந்திர சேகர் எனும் அந்த ஆடவர், தமக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு மார்ச் முதலாம் தேதியும், அதே ஆண்டு, ஏப்ரல் எட்டாம் தேதியும் பேராக், தைப்பிங்கிலுள்ள, இரு வேறு இடங்களில் அவர் அக்குற்றங்களை புரிந்துள்ளார்.

சட்டவிரோத மின்சார இணைப்பை பயன்படுத்திய தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க, 40 வயது முஹமட் அஸ்ராவ் யூனோல் என்பவர் வாயிலாக 38 வயது சம்சுல் அரிப்பிப் ரஹ்மான் எனும் TNB அதிகாரிக்கு, முதல் முறை மூவாயிரம் ரிங்கிட்டையும், இரண்டாவது முறை மூவாயிரத்து 500 ரிங்கிட்டையும் அவர் கையூட்டாக வழங்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!