![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-23-Nov-2023-01-17-PM-8498.jpg)
கோலாலம்பூர், நவ 23 – மலேசியாவில் NCD எனப்படும் தொற்றா நோய்களின் சிகிச்சைக்காக சுமார் 10 பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் அரசாங்க செலவினத்தின் அடிப்படையில் இந்த தொகை இருப்பதாக அவர் கூறினார். மலேசியாவில் தொற்றா நோய்களுக்கான சுகாதார அமைச்சின் நேரடி செலவு 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார். அந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனமும் சுகாதார அமைச்சும் வெளியிட்டன. மலேசியாவின் சுகாதார நலன்களுக்கான மொத்த செலவினத்தில் இது 16.8 விழுக்காடை பிரதிநிதிப்பதாக அவர் கூறினார். நீரழிவு நோய்க்கான சிகிச்சைசைக்கு மட்டும் 4.38 பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது. தொற்றா நோய்க்கான மொத்த செலவினத்தில் இது 45. 38 விழுக்காடை கொண்டிருப்பதாக டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.